லண்டன்,ஜூலை 14- இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி பெருவாரி யாக வெற்றி பெற்று 14 ஆண்டு களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள் ளது.
தேர்தலின் போது மோசம டைந்துள்ள நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றும் நட வடிக்கைகளில் ஈடுபடும்வோம் என லேபர் கட்சியின் தலைவ ரும் தற்போதைய பிரதமரு மான கெய்ர் ஸ்டார்மர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதன்படி தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட உள்ள முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 35 மசோதாக்களை கொண்டுவர உள்ளதாக பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகம் தெரி வித்துள்ளது.
இதில் திட்டங்களுக்கு செலவு செய்வதை கட்டுப்படுத் தும் வகையிலான கடுமையான விதிகளை, கொண்ட மசோதா இருக்கும் எனவும் அவரது அலு வலகம் வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு வந்த பிறகு இந்த அறி விப்புகளை ஸ்டார்மர் அறிவித் துள்ளார். அந்த அறிவிப்பின் போது “நாம் விரைவாக செயல்பட வேண்டும், இனி நேரத்தைத் வீணடிக்க முடியாது” நாங்கள் நீண்ட காலத்திற்கு நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சட்டங்களை முன்வைப்பதன் மூலம் முக்கியமான செயலில் இறங்கியுள்ளோம். இது எங்கள் லட்சியத்திற்கான நிகழ்ச்சி நிரல் எனவும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள் ளார்.
அதே நேரத்தில் தேர்தலுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் பெண் நிதியமைச்சராகப் பதவியேற்ற ரேச்சல் ரீவ்ஸ் கொண்டு வரும் மசோதாக்களில் கார்ப்பரேட் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கி லாந்தில் வீடுகள் கட்டுவதை அதிகரிக்கவும், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மீதான தடைகளை நீக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவற்றில் எல்லாம் தனியார் முதலீட்டை ஈர்க்கும் திட்டங்களை வகுத்துள்ளார்.
நாட்டின் உள் கட்டமைப்பு களை அதிகரித்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என உறுதி கொடுக்கும் லேபர் கட்சி, வளர்ச்சிக் கட்டமைப்பில் அரசாங்கத்தின் நேரடி பொ றுப்பை விலகிக்கிகொண்டு முழு மையாக தனியாரிடம் ஒப்படைக் கும் பணியை செய்து வருகிறது.
மேலும் நடைபெறும் முதல் நாடாளுமன்றத்தில் மக்கள் தலை யில் விதிக்கப்பட்டுள்ள அதிக வரி,பணவீக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாற் றங்கள் வருமா என இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கம் எதிர்ப் பார்ப்புடன் உள்ளது குறிப்பி டத்தக்கது.