ரஷ்ய எரிசக்தி இல்லாமல் அடுத்த குளிர்காலம் மிகுந்த துயரங்களும் பயங்கர விளைவு களும் கொண்டதாக இருக்கும் என பல ஐரோப்பிய நாடுகளின் தலை வர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனி ரஷ்யாவை தனி மைப்படுத்துவது சாத்தியமற்றது என முன்னாள் ஜெர் மனி ஜனாதிபதி ஜெரார்டு ஸ்ரோடர் கூறியுள்ளார்.
உக்ரைன் வீரர்களுக்கு பிரிட்டனிலும் போலந் திலும் பயிற்சிகள் தரப்படுகின்றன என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் கூறினார். இது சிறுபிள்ளைத்தனமானது எனவும் ராணுவ ரகசியங்களை வெளியிடு வதற்கு சமம் எனவும் போலந்து ராணுவ தளபதி வால்டமேர் கடுமை யாக விமர்சித்துள்ளார்.
பல தேசங்களில் சீர்குலைவு செயல்களிலும் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்வதிலும் ஈடுபடும் பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். எனும் உளவு நிறுவனம் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டுள்ளது எனும் பத்தி ரிக்கை செய்திக்கு பின்னர் அதனை தீவிரமாக விசாரிப்பது என ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங் களை அனுப்புவதை ஒருங்கிணைக்க டெர்ரி உல்ஃப் எனும் ராணுவ உயர் அதிகாரியை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
உக்ரைன் கேட்பது போல உக்ரைனின் வான் வெளியை ரஷ்யாவுக்கு தடை செய்வது என்பது ரஷ்யாவுடன் நேருக்கு நேர் மோதுவதற்கு சமம். அது சாத்தியமற்றது என ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் கூறியுள் ளார்.
உக்ரைனில் அமைதி திரும்புவதை அமெ ரிக்கா விரும்பவில்லை எனவும் போர் நீட்டிப்பதற்கு உண்டான அனைத்து செயல்களையும் செய்கி றது எனவும் ரஷ்யா குற்றம்சாட்டி யுள்ளது.
ரஷ்ய எண்ணெயை வாங்கு வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என ஐரோப்பிய தேசமான ஆஸ்திரியா திட்டவட்ட மாக கூறியுள்ளது.
மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஷெல் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய பின்னர் அந்த இடத்துக்கு சீன நிறு வனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. நட்டம் ஷெல்லுக்கு! லாபம் சீனாவுக்கு!
உக்ரைனுக்கு ஆயுதங் களை தருவதை ஜெர் மனி நிறுத்த வேண்டும் என முன் னாள் உதவி ஜனாதிபதி ஒல்மர்/ முன்னாள் ஐ.நா.உதவி பொது செய லாளர் கிறிஸ்டோவ் கிராஃப்/முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் நார்மன் பீச் போன்ற பல முக் கிய தலைவர்கள் ஜனாதிபதி ஷோல் சுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.