பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2.26 மணிக்கு சாரங்கானி பகுதியில் 231 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 23.99 கி.மீ ஆழம் கொண்ட நிலநடுக்கம் முதலில் 3.6951 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 126.6747டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இருக்கும் என ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.