world

img

காசா மீது இஸ்ரேல் போர் : சில முக்கிய கள நிகழ்வுகள்

uநேதன்யாகு போருக்கு முன்பு கொண்டு வந்த நீதிமன்றத்தின் அதிகார குறைப்புதொடர்பான சட்டதிருத்தங் கள் தவறு என இஸ்ரேல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. ஏற்கெனவே சிக்கலில் உள்ள நேதன்யகுவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. இஸ்ரேல் அரசியலில் மேலும் குழப்பங்களும் பிளவுகளும் அதி கரிக்கும். 

uதுருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் “அமெரிக்காதான் உண்மையான தீய சக்தி; கொலைகார அமெரிக்காவே மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வெளியேறு; குழந்தைகளை கொலை செய்பவர்களுடன் வணிகம் செய்வது கொலைக்கு சமம்” என மக்கள் வான் அதிர முழக்கங்கள் எழுப்பினர். மக்களின் உரத்த குரல் துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனை அமெரிக்காவுடன் உறவிலி ருந்து விலகச்செய்யுமா என்பதும் இஸ்ரேலு டன் வணிகம் செய்வதை நிறுத்துமா என்பதும் மிகப்பெரிய கேள்விக் குறியே!

uகாசா போருக்கு பின்னர் ஏராளமான உளவியல் நிபுணர்கள் இஸ்ரேலைவிட்டு பிரிட்டனுக்கு சென்றுவிட்டனராம். இதனால் இஸ்ரேலில் உளவியல் பிரச்சனைகள் அதிகரித்திரு ப்பதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. PTSD எனப்படும் போர் நிகழ்வுகளினால் மனரீதியாக பாதிக்கப்படும் ஏராளமான இஸ்ரேலிய வீரர்களுக்கு உளவியல் பிரச்சனைகளில் உதவிட போதுமான மருத்துவர்கள் இஸ்ரேலில் இல்லை. 

uஏமனின் கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதை நிறுத்தமட்டோம் என ஏமனிய நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. ஏமனுடன் நேரடியாக போருக்கு செல்ல வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என அமெரிக்காவில் வலுவாக குரல் எழுந்துள்ளது. இதற்கிடையேஏமனை தாக்க அமெரிக்காவுடன் கைகோர்க்க தயார்என பிரிட்டன் ராணுவ அமைச்சர்  கூறியுள்ளார். ஏமனின்ஹவுதி அமைப்பினரை தாக்கினால்தான் தைவான் பகுதியில் சீனாவுக்கும் கிரிமீயா பகுதியில் ரஷ்யாவுக்கும் எச்சரிக்கையாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏகாதிபத்திய அரசியல்வாதி  களின் மூர்க்கத்தனத்துக்கு எல்லைகள் எப்பொழுதும் இருந்ததே இல்லை.

uசர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா முன்வைத்துள்ள போர் குற்றங்கள் பற்றிய மனு இஸ்ரேலுக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கும் என பல சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். இன்னொரு தரப்போ ஐ.நா.வையே மதிக்காத இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் பற்றி அலட்டிக்கொள்ளாது எனவும் கூறுகின்றனர். 

uஉலக நாடுகள் காசா பகுதிக்கு 361 விமானங்களில் தந்த சுமார் 10,000 டன் உதவிப் பொருட்கள் எகிப்தில் தேங்கிக் கிடக்கின்றன. இஸ்ரேல் ராஃபா எல்லை வழியாக இவற்றை அனுமதிக்க மறுத்து வருகிறது. மறுபுறத்தில் உதவிப் பொருட்கள் இல்லாமல் காசா மக்கள் அல்லல்படுகின்றனர். 

uகாசா மக்களை “சுய இடம்பெயர்தல்” மூலம் மற்ற நாடுகளுக்கு அனுப்பும் திட்டம் பகற்கனவு என ஹமாஸ் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளயேரை பாலஸ்தீனத்தின் பிரிட்டன் தூதர்வேண்டியுள்ளார். தனது சொந்த உளவுத் துறையின் எச்சரிக்கையை நிராகரித்து பிரிட்டன் மக்களிடம்  பொய்களை கூறி அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கை நாசமாக்கிய பிளேர் இந்த வேண்டுகோளை ஏற்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

u ஹரேல் இடாக் எனும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒரு பாலஸ்தீன குழந்தையை கடத்தியதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த 
குழந்தையின் பெற்றோர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த குழந்தையை அவர் கடத்தினார். ஆனால் அவர் பின்னர் காசா பகுதி போரில் கொல்லப்பட்டார். இப்பொழுது அந்த குழந்தை எங்கே என தெரியவில்லை என மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இப்படி ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டனவா எனும் ஐயத்தையும் இது உருவாக்கியுள்ளது.

uஹமாசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சலே அல் அரோரி என்பவரை லெபனானில் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. இதனை ஹமாஸ்/ பாலஸ்தீன கம்யூனிஸ்டு கட்சி/ ஹெசபுல்லா/ ஹவுதி/ ஈரான்/சிரியா உட்பட பலர் கண்டித்துள்ளனர். எங்கள் நாட்டில் அனுமதியுடன் தங்கியிருந்த ஒருவரை இப்படி கொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என லெபனான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அல் அரோரியின் படுகொலையை கண்டித்து மேற்கு கரை/ துருக்கி/ ஜோர்டான்/ லெபனான் போன்ற பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாடங்களும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றன. இதற்கிடையே அமைச்சர்கள் இது பற்றி எவரும் பேச வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த படுகொலைக்கு இஸ்ரேல் விளைவுகளை சந்திக்கும் என அனைத்து பாலஸ்தீன ஆதரவு குழுக்களும் எச்சரித்துள்ளன. பணயக்கைதிகள் பரிமாற்றம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஹமாஸ் நிறுத்திவிட்டது. என் மகனின் தியாகத்தைவிட பெரிய பெருமை எதுவும் இல்லை என அரோரியின் 80 வயதான தாய் கூறியுள்ளார். இந்த படுகொலை போரில் ஒரு முக்கிய திருப்புமுனை என கருதப்படுகிறது.

uசெங்கடலில் செல்லும் இஸ்ரேலின் கப்பல்களை நிறுத்தும் ஹவுத்தி அமைப்பின் செயல்கள் மேலும் மேலும் பலவிளைவுகளை உருவாக்கி கொண்டுள் ளன. ஒரு பன்னாட்டு கப்பற்படையைஅமெரிக்கா உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் பெரிய முன்னேற்றம் இல்லை. ஹவுதி அமைப்பின் மூன்று படகுகளையும் 10 வீரர்களையும் அமெரிக்க அழித்துள்ளது. இப்பொழுது இந்த பகுதிக்கு ஈரான் ஒரு பெரிய போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. ஹவுதிக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கு இது ஈரான் செய்யும் எச்சரிக்கை. போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

uஅமெரிக்க மக்களின் வரிப்பணத்தை எடுத்து மக்களை கொல்லும் இஸ்ரேலுக்கு நிதி உதவி 10.1 பில்லியன் டாலர்களை கொடுப்பது ஏற்க முடியாது என அமெரிக்க முற்போக்கு இடதுசாரி செனட்டர் பெர்னி சான்டர்ஸ் கூறியுள்ளார். தொடக்கத்தில் இஸ்ரேலை கண்டிக்க மறுத்த இவர் தற்பொழுது தனது நிலையை சிறிது மாற்றியுள்ளதாக தெரிகிறது.

uஇஸ்ரேலின் 85 நாட்கள் தாக்குதலுக்கு பின்னரும் ஹமாஸ் இன்னும் ராணுவ ரீதியாக வலிமையாகவே உள்ளது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஜான் கிர்பி கூறியுள்ளார். 

uசர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலின் போர் குற்றங்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா அளித்த புகாரை அடுத்த வாரம் விசாரணை தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஜான் கிர்பி கூறியுள்ளார். 22,000 பேர் படுகொலை; 70% பெண்கள் குழந்தைகள்; 18 லட்சம் பேர் வீடிழப்பு. இவ்வளவுக்கு பிறகும் அமெரிக்காவின் இந்த கூற்று இஸ்ரேலை எந்த அளவுக்கு அமெரிக்க ஏகதிபத்தியம் ஆதரிக்கிறது என்பதற்கு சான்று. 

அ.அன்வர் உசேன்