world

img

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் : 100க்கும் மேற்பட்டோர் படுகொலை

காசா, ஆக. 11 - காசாவில் உள்ள தபீன் என்ற பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள்பலியாகினர்.

காசா மக்கள் அவசர சேவை அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பிற்காக பள்ளி யில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் அதிகாலையில்  பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத வகையில் சிதைந்து போயுள்ளன என செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல் குறிப்பிட்டுள்ளார்.

 இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் களால்  வீடுகளை இழந்த மற்றும் வெளியேற்றப் பட்ட பாலஸ்தீனர்களை,  ஐ.நா. பாலஸ்தீன அகதி களுக்கான நிவாரண அமைப்பு பள்ளிகளிலும், கூடா ரங்கள் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம் களிலும் தங்க வைத்துள்ளது. பாலஸ்தீனர்கள் தஞ்ச மடைந்துள்ள பகுதிகளில் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி படுகொலை செய்கிறது.

சனிக்கிழமையன்று தபீன் என்ற பள்ளிக் கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குத லில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற் பட்டோர் உடல் சிதறி பலியாகினர்.  இஸ்ரேலின்  தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள பத்திரி கையாளர்கள் குழந்தைகளின் உடல்கள், அவர் களின் பொம்மைகள் படுக்கைகள் எரிந்து, கிழிந்து  சிதறிக் கிடப்பதையும், அடையாளம் காண முடியாத வகையில் முகம் சிதைந்தும், உடல்கள் துண்டு துண்டாக சிதறியும் கிடக்கும் கோரக் காட்சி களை காணொலியாக வெளியிட்டுள்ளனர்.

இது சர்வ தேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தபீன் பள்ளி வளாகத்தில் மட்டும் சுமார் 350 பாலஸ்தீன குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர் என்று பஸ்சல் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.  முதலில் அகதிகள் தங்குமிடங்களான பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் அமைத்து தங்கியுள்ளதாக தெரிவித்து வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் வீரர்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டதாகக் கூறி இந்த கொலைகளை நியாயப்படுத்துவதற்காக ஆதர மற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.  

இந்த தாக்குதல் போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதி எனவும் இது கடுமையான குற்றம் எனவும் ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் வைக்கும் குற்றச்சாட்டின்படி, கொலை செய்யப்பட்ட மக்களிடையே ஒரு ஹமாஸ் வீரரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.