தென் கொரிய எதிர்க்கட்சியான ஜன நாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே- மியுங் பூசன் நகருக்கு சென்றிருந்த போது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக அந் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த லீ, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்த தாக்குதலால் அவர் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல முடன் உள்ளார்.