world

img

முதல் முறையாக தலிபான் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை

காபூல்,நவ.8- ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி முதல்முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா தலை மையிலான நேட்டோ படை தலிபான்களை ஒடுக்குவதாக கூறிக் கொண்டு ஆப்கானை சிதைத்து அதன் வளங் களை கொள்ளைய டித்தப் பிறகு 2021 இல் தலிபான்களையே ஆட்சி செய்ய வழி விட்டுச் சென்றது. தலிபான்களின் ஆட்சியை பல உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லை.இதன் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடு கள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.   இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான எவ்வித செயலிலும் ஈடுபட யாரை யும் அனுமதிக்க மாட்டோம் என தலிபான் அரசாங்கத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும்  இதையடுத்து அந் நாட்டுடனான உறவை புதுப்பிக்க இந்திய அரசு திட்ட மிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது  ஆப்கானுக்கு சென்றுள்ள இந்திய வெளியுற வுத் துறை இணைச் செயலாளர் ஜே.பி.சிங், தலிபான் அர சின் பாதுகாப்புத் துறை  அமைச்சர்  முகமது யாகுப் முஜா ஹித்தை நவம்பர் 6 அன்று  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார். மேலும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீது கர்சாய் உள்ளிட்டோரையும் ஜே.பி.சிங் சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தற்போது தான் முதல் முறையாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மனிதாபிமான ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என இந்த சந்திப்பு குறித்து ஆப் கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.