world

img

சீனா தொழிற்சாலையில் தீ விபத்து - 38 பேர் பலி

சீனாவின் அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு 63 தீயணைப்பு வாகனங்களில், 240 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பல மணி நேரம் போராடி  தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின்சார வெல்டிங் மூலம் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.