world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மோசமான உணவு நெருக்கடி: ஐ.நா. திட்ட இயக்குநர் எச்சரிக்கை

லெபனான் மிக மோசமான உணவு நெருக் கடியை எதிர் கொள்வதாக லெபனா னில் உள்ள உலக உணவுத் திட்ட இயக்குநர் மேத்யூ ஹோலிங்வொர்த் எச்சரித்துள்ளார். விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் அழிவு இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலுக்கு இடையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்நாட்டின் தெற்கு பகுதியில் 4,700 ஏக்கர் விவசாய நிலங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 30,000 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் கைவிடப்பட்டுவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிக்கு சீனாவிடம் திட்டம்: ஹங்கேரி பிரதமர்

போரை நிறுத்தி அமைதியை கொண்டு வர சீனா திட்டம்  வைத்துள்ளது என ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அப்பேட்டியில் அமெரிக்கா போர்க் கொள்கையின்படி  போரை முன்னெடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது தன்னாட்சி அதிகார அடிப்படையில் ராஜதந்திர உறவு குறித்து முடிவெடுக்காமல், அமெரிக்கா போடும் உத்தரவையும், நிலைப்பாட்டையும் தனது நிலைப்பாடாக மாற்றிக்கொள்கிறது என்றார்.

இஸ்ரேல் ராணுவம் முன்னேறுவதை  தடுத்த ஹிஸ்புல்லா 

லெபனானில் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு குழுவை முன்னேற விடாமல் ஹிஸ்புல்லா அமைப்பு தடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது வான்வழித் தரைவழித் தாக்கு தல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. அமைதி காக்கும் நிலையத்திற்கு அருகே லபோனே என்ற எல்லைக்கிராமத்திற்கு அருகே ஊடுருவ முயன்ற இஸ்ரேல் படையின் ஒரு குழுவை  ஹிஸ்புல்லா அமைப்பு சண்டையிட்டு பின்னடைய செய்துள்ளது.

சிரியா மக்கள் படுகொலை:  இஸ்ரேல் ராணுவம் வெறி 

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள மெஸ்ஸா என்ற நகர் பகுதியில் உள்ள பொது மக்களின் கட்டிடங்கள் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி யுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தை கள் உள்ளிட்ட ஏழு பேர் படுகொலையாகியுள்ள னர். பதினோரு பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று கள் பகுதியில் இருந்து சிரியா மீது இந்த ஏவு கணைத் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

குழந்தைகளைக் கடத்தும்   ஹைட்டி ஆயுதக் குழுக்கள் 

ஹைட்டியில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்கள்  அதிகளவில் குழந்தைகளை கடத்தி வந்து ஆயுதப்பயிற்சி கொடுத்து வழிப்பறி, கொலை, கொள்ளை கடத்தல் உள்ளிட்ட வன் முறைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் பெண் குழந்தைகள் கட்டாய பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உலகளா விய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.