இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா தயார்
இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தினால் எதிர் ்கொள்ளத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம் பேசியுள்ளார். மேலும் இஸ்ரே லால் எங்களுடைய ராணுவத்திறன் களை தாக்க முடிய வில்லை எனவும் கூறியுள்ளார். லெப னானை ஆக்கிரமிப் பது, லெபனான் மக் ளை படுகொலை செய்வது என இஸ்ரேல் குழப்பத்தை உருவாக்கினாலும் எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறுவோம் எனவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை விமர்சிக்கும் ஜெர்மி கோர்பின் எம்.பி.,
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுத்துக் கொண்டே போரை நிறுத்த வேண்டும் என கூறுவது அர்த்த மற்றது என தொழிலாளர் கட்சி முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ஜெர்மி கோர்பின் அமெரிக்காவை விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக் காவின் இந்த செயல் இஸ்ரேலின் ஆக்கிர மிப்புகளுக்கு முடிவு கட்டாது எனவும் கூறியுள்ளார். இஸ் ரேலுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதன் மீது பொருளாதாரத் தடை விதித்து ராஜ்ய உறவு களை துண்டிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல் கொடூரமானது: போப் கண்டனம்
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கொடூரமானது என போப் பிரான் சிஸ் கண்டித்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் நஸ் ரல்லாவை இஸ் ரேல் படுகொலை செய்தது குறித்து போப்பிடம் கேள்வி எழுப்பிய போது இவ் வாறு அவர் கூறியுள் ளார். மேலும் இஸ் ரேல் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கிறது எனவும் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு நாளும் தான் காசாவின் திருச்சபையில் இருந்து அங்கு நடக்கும் கொடுமைக ளை கேட்டு தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தக்க பதிலடி கிடைக்கும் : இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும் என ஈரானின் வெளி விவகாரங்களுக் கான துணை ஜனாதிபதி முகமது ஜாவத் ஜரீப் எச்ச ரித்துள்ளார். நஸ்ரல் லாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ் வில் இவ்வாறு தெரி வித்துள்ளார். ஹிஸ் புல்லா தலைவரை கொலை செய்த பிறகு எப்போது வேண்டுமானாலும் ஈரான் நேரடியாக போரில் இறங்கும் என கூறப்படு கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்காவும் தயாராக உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நஸ்ரல்லாவை காட்டிக்கொடுத்தது ஈரான்: உளவாளி பிரான்ஸ் பத்திரிகை செய்தி
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இருப்பிடம் குறித்த தகவலை இஸ்ரேலுக்கு கொடுத்தது ஈரான் நாட்டை சேர்ந்த உளவு ஏஜென்ட் என பிரான்ஸ் நாட்டின் லீ பெர்சியன் என்ற பத்திரிகை கூறி யுள்ளது. லெபனா னின் பாதுகாப்புத் துறை ஆதாரங்க ளை மேற்கோள் காட்டி செய்தி வெளி யிடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உளவு தகவல் கிடைத்து சில மணி நேரத்தில் பங்கர்களை தகர்க்கும் பல குண்டுகளை வீசி நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொலை செய்தது.