காசாவில் அழிக்கப்பட்ட கல்வி கட்டமைப்புகள்
காசாவில் ஒட்டு மொத்த கல்வி கட்டமைப்புகளையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அழித்துவிட்டன. இதுவரை இஸ்ரேல் ராணுவம் 11,000 மாணவர்கள், 750 ஆசிரியர்கள்,115 பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை படுகொலை செய்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 500 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை வெடி குண்டு வீசி தகர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே சீனா தான் மிகப்பெரிய சவால்
அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய சவாலான நாடாக சீனா தான் உள்ளது என அமெரிக்காவின் துணைச் செயலர் காம்ப்பெல் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை குழுவினரிடம் பேசிய போது இதனை அவர் கூறியுள்ளார். மேலும் சீனா ராணு வத்தில் மட்டுமல்ல, அதையும் தாண்டி தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட வளர்ச்சியில் சவால் மிகுந்த நாடாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் இணக்கமாகச் செல்லக்கூடாது எனவும் பேசியுள்ளார்.
இஸ்ரேலுடன் ராஜீய உறவுகள் மேற்கொள்ள மாட்டோம் : சவூதி
ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான தங்களது முயற்சிகளை சவூதி அரேபியா நிறுத்தாது என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரே லின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் குற்றங்களையும் வலுவாக கண்டித்துள்ளார். மேலும் சுதந்திர பாலஸ்தீனம் அமையும் வரை இஸ்ரேலுடன் ராஜ்ய உறவுகளை மேற்கொள்ள மாட்டோம் என உறுதியாகக் கூறியுள்ளார்.
1,100 சுகாதார ஊழியர்களை படுகொலை செய்த இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவம் 1,151 சுகாதாரத்துறை ஊழி யர்களை படுகொலை செய்துள்ளதாக பாலஸ் தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் 165 பேர் மருத்துவர்கள், 260 பேர் செவி லியர்கள், 300 பேர் துணைப் பணியாளர்கள், 184 பேர் சுகாதார வல்லுநர்கள், 76 பேர் மருந்தா ளுனர்கள் என தெரிய வந்துள்ளது. 986 நபர்க ளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 165 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பாலஸ் தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களை கட்டுப்படுத்தும் கனடா
கனடாவில் தற்காலிகமாக குடியேறுபவர்க ளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்பு அனுமதியை குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது கனடா அரசு. மாணவர்களின் படிப்பு அனுமதி மட்டும் இல்லாமல் வெளிநாட்டு தொழிலா ளர்களுக்கான அனுமதி அளிக்கும் விதிகளி லும் சில மாற்றங்களை அந்நாட்டு அரசு மேற் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.