world

img

இலங்கை: பேருந்து மரத்தில் மோதிய விபத்து

இலங்கையின் வலஸ்முல்லாவில் வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்  32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.  

இலங்கையில் கல்விச் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பிய போது வலஸ்முல்ல பகுதியில் பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற பேருந்து திடீரென மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்டு வலஸ்முல்ல பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளை எதிர்கொள்கிறது.  கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 52 இருசக்கர வாகன விபத்துகளில் 53 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 2,461 பேர் இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.