இலங்கையில் வருகின்ற செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ல் துவங்க உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நிதியமைச்சர் விஜய தாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.