கொழும்பு, செப். 24 - இலங்கையின் இடைக்காலப் பிரதம ராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில், புதிய ஜனாதிபதியாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி யின் தலைவர் அனுர குமார திஸா நாயக்க திங்கட்கிழ மை பதவியேற்றுக் கொண்டார். புதிய அதிபர் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படு வதற்கு வசதியாகவும் புதிய ஆட்சி சூழ லுக்கு ஏற்ப புதிய அமைச்சரவையை உரு வாக்குவதற்கு ஏதுவாகவும் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியா இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவர், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் செவ்வாயன்று இடைக்காலப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். நீதி, கல்வி, தொழில்துறைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இடைக்காலப் பிரதமராக பதவியேற்றதன் மூலம், இலங்கையின் 2-ஆவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார்.