உலகமெங்கும் பிளாஸ்டிக் மாசுக்கள் பூமியை மூச்சுத் திணறச் செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய மாசுக்கள் நுழையாத இடமே இன்று பூமியில் இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமை மோசமாகி யுள்ளது. இப்போது இதோ வட தென் துருவங்களி லும் நானோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மனித வாசம் மிகக் குறைவான இப்பகுதிகளில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் சென்று சேர்ந்துள்ளது இதன் பரவல் எந்த அளவிற்கு மோசமாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்து யுட்ரெஷ் பல்கலைக்கழகம் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வுகளில் அதிர்ச்சி யூட்டும் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஒரு மைக்ரோமீட்டருக்கும் குறைவான நீளமுடை யவையே நானோ பிளாஸ்டிக்குகள் எனப்படு கின்றன. இவை காற்றிலும், கடல்நீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளை விட வெகுதூரம் பயணம் செய்யும் ஆற்றல் உடையவை. ஆர்க்டிக், அண்டார்டிக் மற்றும் கிரீன்லாந்தில் நடந்த ஆய்வுகளில் உள்ள பனிக்கட்டி களில் இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லி லிட்டர் உருகிய பனியில் 13 நானோ கிராம் பிளாஸ்டிக் துகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் துகள்கள் பூமியெங்கும் நீக்கமற நிறைந்துள்ளதையே இது எடுத்துக்காட்டுகிறது. மைக்ரோ பிளாஸ்டி க்குகள் எனப்படும் நுண் பிளாஸ்டிக்குகளை விட நானோ பிளாஸ்டிக்குகள் நச்சுத்தன்மை அதிகம் உடையவை. இவை இப்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ளன என்றாலும் மனி தர்களின் உடல் நலத்தில் இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
ஐம்பதாண்டுகளாக நானோ பிளாஸ்டிக்குகள்
கிரீன்லாந்தில் ஒரு பனிப்படலத்தின் மையப் பகுதியில் இருந்து (core) பனிக்கட்டிகள் எடுத்து ஆராயப்பட்டது. அதில் கடந்த 50 ஆண்டுகளாக நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தவிர பனிப்படலங்களில் காணப் பட்டதில் கால்பகுதி வாகன டயர் துகள்களும் கலந்திருந்தன. இது ஆய்வாளர்களை வியப்படையச்செய்தது. நானோ துகள்களின் எடை மிக மிகக் குறைவு. இதனால் இவை வட அமெரிக்கா, ஆசி யாவில் உள்ள நகரங்களில் இருந்து காற்றின் மூலம் பரவி இங்கு வந்துள்ளன. அண்டார்டிகா வில் உள்ள மக்மக்கார்டோ (McMcurdo) கடற் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளில் இத்துகள்கள் கடல் நீரோட்டத்தால் அடித்து வரப்பட்டுள்ளன. கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டியில் 49.2% பாலி எத்திலீன், 24.2% டயர் துகள்கள், 20.1% பி இ டி, 0.8% பாலி ஸ்டைரின், 0.9% பி வி சி, 4.3% பாலிப் புரோப்பலின் என்ற அளவில் நானோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அண்டார்டிகாவில் பாலி எத்தி லீன், டயர் துகள்கள் மற்றும் பி இடி ஆகியவை முறையே 55.2%, 16.4%, 28.4% என்ற அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழ்கடல் வரை
பூமியை சீரழிக்கும் நச்சு வேதிப்பொருட் களில் பிளாஸ்டிக் மாசுக்களே உலகம் முழு வதும் இன்று பரவியுள்ளன. இவை மனித உடல் நலத்தின் பாதுகாப்பு எல்லைகளை தாண்டிவிட் டது என்று அஞ்சப்படுகிறது. எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழ்கடல் வரை எல்லா இடங்களிலும் பிளா ஸ்டிக் துகள்கள் நிறைந்துள்ளன. மனிதர்கள் நுண் பிளாஸ்டிக்குகளை அவர்கள் அறியாமலேயே உண்கின்றனர். குடிக்கின்றனர். இவை உடற்செல்களைப் பாதிக்கிறது. பூமியின் தெற்கு மற்றும் வட துருவப் பகுதி களின் தொலைதூரங்களில் உள்ள பனிக்கட்டி களிலும் இத்துகள்களைத் தாங்கள் கண்டுபிடித்த தாக நெதர்லாந்து யுட்ரெஷ் (Utrecht) பல்கலைக் கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலை வர் ட்யூஷன் மட்டேரிக் (Deushan Matericq) கூறுகிறார். மைக்ரோ பிளாஸ்டிக்குகள் எனப் படும் நுண் துகள்களை விட நானோ பிளாஸ்டிக்கு கள் அதிக நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமைப்பொருட்கள். கிரீன்லாந்தில் 14 மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பனிப்படலம் ஆராயப்பட்டது. இதில் 1965 முதல் உள்ள பனிப்பொழிவுகள் பற்றிய செய்திகள் பதிவாகியிருந்தன. இதில் நானோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியத்தைத் தரவில்லை. ஆனால் பனிப் படலத்தின் மையப்பகுதி வரை இத்துகள்கள் காணப்பட்டதே பெரும் வியப்பை ஏர்படுத்தி யது என்று மட்டேரிக் கூறுகிறார். நானோ பிளாஸ்டிக்குகள் முதன்மை மாசு படுத்திகளாகக் கருதப்பட்டாலும் இவை அதிக மனிதவாசம் இல்லாத துருவப்பகுதி யில் நீண்டகாலம் பல ஆண்டுகளாக இருந்து வருவதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆர்க்டிக்கில் முன்பே மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கண்டு பிடிக்கப்பட்டன.
மிக நுண்ணிய நானோ பிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் புதிய முறைகளை கையாண்டனர். டயர் துகள்கள் கடல்நீரில் கலந்துள்ளன என்று முன்பு அறியப் பட்டிருந்தது. என்றாலும் இந்த புதிய ஆய்வு கள் பனிக்கண்டத்தில் இவை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. “சுற்றுச்சூழல் ஆய்வு” (Environmental Research) என்ற ஆய்விதழில் வெளி யிடப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வுகளின்படி கிரீன்லாந்தில் ஒரு மில்லிமீட்டர் உருகிய பனிப்பாறையில் 13 நானோ கிராம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன. ஆனால் இது அண்டார்டிகாவில் நான்கு மடங்கு அதிகம் காணப்பட்டது. கடலில் பனிக்கட்டிகள் உருவாகும்போது இத்துகள்கள் அதனுடன் இணைவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கிரீன்லாந்தில் பனிப்படலங்களில் காணப்பட்டதில் பாதிக்கும் மேல் பாலி எத்திலீன் (P E) துகள்களே இருந்தன. இந்த வகை பிளாஸ்டிக் ஒரு தடவை பயன்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பேக்கேஜிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் 25% டயர் துகள்கள், ஐந்து பகுதி பாலி எத்திலீன் டெரிப்ப்தலேட் (Poly Ethylene Terephthalate PET) துகள்கள் இருந்தன. பி இ டி வகை பிளாஸ்டிக்குகள் பானங்கள் அருந்தப் பயன்படும் பாட்டில்கள் மற்றும் ஆடைத் தொழிலில் பயன்படுகின்றன. பொட்டல மிடப்பட்டு விற்கப்படும் உணவுப்பொருட்களில் (take away foods) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாக்கேஜிங் மற்றும் பானங்கள் அருந்தப் பயன்படும் பாட்டில்களே கடல்களை அதிகம் மாசுபடுத்துகின்றன. ஆனால் பூமியின் இரு கோடி துருவங்களி லும் பிளாஸ்டிக் நானோ துகள்கள் கலந் திருப்பது நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் காட்டுகிறது. அண்டார்டிகா பனிப்படலங்களில் உள்ள நானோ பிளாஸ்டிக் துகள்களில் பாதிக்கும் மேல் பாலி எத்திலீன் கலந்துள்ளது. அங்குள்ள பனிக்கட்டிகளில்அதிகம் காணப்படும் இரண்டா வது முக்கிய மாசு பாலி புரொப்பலீன். இந்த வகை பிளாஸ்டிக் உணவுப்பாத்திரங்கள் (food containers) மற்றும் குழாய்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
கலப்படம் நிகழ்வதைத் தடுக்க பனிப்பட லங்களின் ஆழமான மையப்பகுதியில் இருந்தே ஆய்வாளர்கள் மாதிரிகளை சேகரித்தனர். தூய நீரின் கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளே பனிக்கட்டிகளைப் பரிசோதிக்கப் பயன்படு த்தப்பட்டன. யு கே நாட்டின் ஆறுகள், வட அட்லாண்டிக்கின் கடல்நீர், சைபீரியாவின் ஏரிகள், ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் பனிமலைச் சிகரங்களில் நானோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளதை முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டின. மக்கள் வாழும் பூகண்டங்கள் மட்டுமே நானோ பிளாஸ்டிக்குகள் காணப்படும் இடங்கள் (hotspots) என்று இதுவரை நினைக்கப்பட்டது. ஆனால் மனித வாசமே இல்லாத துருவப்பகுதி களிலும் இப்போது இந்தப் பிளாஸ்டிக்குகள் பரவி யுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று மட்டெரிக் கூறுகிறார். நானோ பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் சைட்டா டாக்சிசிட்டி (cytotoxicyty) என்ற நச்சுபாதிப்பு மற்றும் வீக்கம் முக்கியமானவையாகக் கருதப் படுகின்றன. அச்சம் தரும் புதிய தகவல்களை அளிக்கும் இந்த ஆய்வுகள் இப்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.
இதுபற்றி மேலும் தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். என்றாலும் எவ்வாரு எந்த இடத்தில் ஆராய்ந்தாலும் நானோ பிளாஸ்டிக்கு கள் மனிதகுலத்திற்குப் பெரும் பிரச்சனை யாகவே உள்ளது. இவை எந்த அளவு அபாயகர மானவை? இதுபற்றி இன்னும் முழுமை யாகத் தெரியவில்லை. நானோ பிளாஸ்டிக்குகள் மற்றும் நுண் பிளா ஸ்டிக்குகள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு கள் பற்றி விரிவாக யு கே போர்ட்ஸ்மவுத் (Portsmouth) பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று ஆராயத்தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானி ஃபே கவ்சேரோ (Fay Couceiro) கூறி யுள்ளார். இதன் முதல்படியாக நாள்பட்ட நுரை யீரல் அடைப்பு நோய் (Cronic Obcessary Pulmanary Disease COPD) மற்றும் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பற்றி ஆராயப்படவுள்ளது. நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும் புதிய அறைகளில் விரிக்கப்படும் விரிப்புகள் மற்றும் வெற்றிட சுத்திகரிப்பான்கள் மூலம் காற்றில் கலக்கும் பிளாஸ்டிக் நுண்ணிழைகளால் நோயாளிகளின் நுரையீரலில் எந்த அளவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ஆராயப்படும். சுற்றுச்சூழலிற்கு ஏற்படுத்தும் பாதிப்பைத் தவிர மனிதனின் உடலில் நுண் பிளாஸ்டிக்குகள் எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்குகிறது என்பது பற்றி தீவிரமாக ஆராயப்படவேண்டும் என்று கவ்சேரோ கூறுகிறார்.
பிளாஸ்டிக் உண்ணும் மனிதன்
மக்கள் வீடுகளில் நாள்தோறும் 2000-7000 நுண் பிளாஸ்டிக்குகளை சுவாசிக்கின்றனர் என்று இவரது சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் தரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவை என்று போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக தேசிய அறக் கட்டளை மருத்துவச்சேவை (NHS) மருத்துவ மனை சுவாசப்பிரிவு நிபுணர் பேராசிரியர் அனூப் ஜிவான் சௌஹான் கூறுகிறார். நம்மையும் அறியாமல் நாம் ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் வரை சுவாசிக்கிறோம் அல்லது விழுங்குகிறோம். ஒரு முறை உடலிற்குள் புகுந்தபிறகு இவை நம் உடலில் மீட்கமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று அனூப் கூறுகிறார். அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் பிளாஸ்டிக்கை மனிதன் விவேகமற்றமுறையில் பயன்படுத்தும்போது அதுவே அவனை அழிக்கும் ஆயுதமாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.