பாகிஸ்தானில் அமைச்சர்கள் மாயம் இஸ்லாமாபாத், மார்ச் 27- பாகிஸ்தான் பிரத மர் இம்ரான்கானின் கட்சி உறுப்பினர்கள் சிலரே அவருக்கு எதி ரான நம்பிக்கை யில்லா தீர்மானத் துக்கு ஆதரவளிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசே காரணம் எனக் கூறி அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இம்ரான்கான் கட்சி மீதான நம்பிக்கை யில்லா தீர்மானம் திங்களன்று வாக்கெடுப் பிற்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இம் ரான்கானின் கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவ ளிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ‘மாயமாகி’ விட்டதாகக் கூறியுள்ள தி எக்ஸ்பிரஸ் டிரிப் யூன், காணாமல் போன அமைச்சர்களில், 25 பேர் மத்திய மற்றும் மாகாண ஆலோச கர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்கள்; அவர் களில் நான்கு பேர் மாநில அமைச்சர்கள், நான்கு பேர் ஆலோசகர்கள் மற்றும் 19 பேர் சிறப்பு உதவியாளர்கள் என ஆதாரங்களை மேற்கோள்காட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, எரிசக்தித் அமைச் சர் ஹம்மாத் அசார், பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் மற்றும் உள்துறை அமைச் சர் ஷேக் ரஷீத் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ராம்கானை ஆதரிக்கின்றனர். பாகிஸ்தான் சட்டமன்றத்தின் மொத்த பலம் 342. பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை 172 ஆகும். இம்ரான் கான் கட்சிக்கு (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) 155 உறுப்பினர்கள் உள்ளனர். தவிர நான்கு முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு முறையே ஏழு, ஐந்து, ஐந்து மற்றும் மூன்று என மொத்தம் இருபது உறுப்பினர்கள் உள்ள னர்.