லண்டன், டிச.16- கடுமையான பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளைத் தாங்க முடியாமல் பிரிட்டன் செவிலி யர்கள் முதன்முறையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். விலைவாசி உயர்வுக்கேற்ற வகையில் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்கள் போராடி வருகிறார்கள். லட்சக் கணக்கான மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசும், நிறுவனங்களும் ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட மறுக்கின் றன. பேச்சுவார்த்தை நடக்கும் இடங்களி லும் அவற்றை இழுத்தடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். மற்ற துறைகளைப் போலவே மருத்துவ ஊழியர்களும் போராட் டக் களத்தில் குதித்துள்ளனர். ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள் ளார்கள். ஏராளமான சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவமனைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும்முன்வைத்து செவிலியர்கள் போராடுகிறார்கள். வெறும் நான்கு விழுக்காடு ஊதிய உயர்வுதான் தர முடியும் என்று அரசு கூறி வருகிறது. அதற்கு மேல் தந்தால் முன்களப் பணிகளுக் கான நிதி ஒதுக்க முடியாது என்கிறார் கள். அப்படியானால் நாங்கள் முன் களப் பணியாளர்கள் இல்லையா என்ற கேள்வியை செவிலியர்கள் எழுப்பியுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வராத பட்சத்தில் மீண்டும் டிசம்பர் 20 ஆம் தேதியன்று வேலை நிறுத்தத்தை நடத்த செவிலி யர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.