பாரீஸ், ஜூன் 23- பிரிக்ஸ் அமைப்பில் பல்வேறு நாடுகள் உறுப்பினராகச் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அந்நாடுகளை இணைத்துக் கொள்வது பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பொருளாதார ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து ‘‘பிரிக்’’ அமைப்பை உருவாக்கின. இதன் முதல் உச்சிமாநாடு 2009-ஆம் ஆண்டில் நடந்தது. பின்னர், 2010-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவும் அதில் இணைந்து ‘‘பிரிக்ஸ்’’ என்ற பெயர் கிடைத்தது. இந்த ஐந்து நாடுகளின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 41 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 விழுக்கா ட்டை வைத்துள்ளன. உலக வர்த்தகத்தில் 16 விழுக்காடு இந்த நாடுகளின் வசம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உலகப் பொரு ளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பிரிக்ஸ் நாடுகள் இருப்பதால், இந்த அமைப்பில் சேர 25 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கடந்த 13 ஆண்டுகளாகப் புதிதாக எந்த நாட்டை யும் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ப்பது பற்றிய விவா தம் நடக்கவில்லை. உலகச் சூழல் மாறிவரும் நிலை யில் அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளை யும் மட்டும் நம்பியிருக்க முடியாது என்ற முடி வுக்குப் பல்வேறு நாடுகள் வந்துள்ளன. மேலும் தென் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் காரணிகளாக இருக்கின்றன. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளில் சவூதி அரேபியா, அர்ஜெண்டினா, பெலாரஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், மெக்சிகோ, நிகரகுவா, நைஜீரியா, சிரியா, சூடான், தாய்லாந்து, துர்க்கியே, உருகுவே, வெனிசுலா ஆகிய நாடுகளும் அடங்கும். பாரீசில் நடைபெற்று வரும் உலக நிதி உடன்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வாவும், தென் ஆப்பிரிக்காவின் ஜனாதி பதி சிரில் ராமபோசாவும் சந்தித்துப் பேசியிருக் கிறார்கள். அவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தையில் பிரிக்சில் புதிய உறுப்பினர்கள், உக்ரைன் விவகாரம், சுற்றுச்சூழல் கேடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.
உக்ரைன் விவகாரம்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிரிக்ஸ் நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல்வேறு அம்சங்கள் கொண்ட தீர்வை சீனா முன்வைத்தது. அந்தத் தீர்வில் உக்ரைன் விவகாரம் மட்டுமில்லாமல், உலக அளவிலான பல்வேறு மோதல்களை முடி வுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அமெரிக்க அழுத்தத்தால் அந்தத் தீர்வு விவாதிக்கப்படவில்லை. போர் தொடர் வதையே அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் விரும்புகிறார்கள். ஆப்பிரிக்கத் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றிற்குத் தலைமையேற்று, ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா சென்று வந்தார். உக்ரைனின் அமைதி வருவது பற்றி ஆப்பிரிக்கக் கண்டத்தின் பார்வையை விளக்கு வதற்காக தங்கள் குழு இரு நாடுகளுக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரிக்ஸ் நாணயம்
வரும் உச்சிமாநாட்டில் முக்கியமான பேசு பொருளாக ‘‘பிரிக்ஸ் நாணயம்’’ இருக்கப் போகிறது. இது டாலரின் மேலாதிக்கத்தை உடைக்குமா என்ற கேள்விகள் முன்வைக்கப்படு கின்றன. ஆனால் முதல் கட்டமாக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை இந்த நாணயம் எளிதாக்கி விடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதன்முறையாக மேற்கத்திய நாடுகளின் ஏகபோகத்தைத் தகர்க்கும் விதமாக பிரிக்ஸ் நாணயத்தின் பயன்பாடு இருக்கப் போகிறது. அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைக்க வேண்டும் என்று இந்த நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் இந்த முயற்சிகளின் வேகத்தை அதிகப்படுத்திவிட்டன. அண்மையில் அமெரிக்காவின் கடன் வரம்பு விவகாரத்தால் டாலரின் மதிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. இது பல நாடுகளின் கவலைகளை அதிகரித்தது.