கான்பெரா,டிச.26-கிறிஸ்துமஸ் தின இரவில் ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியதில் 1,10,000 வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் மற்றும் கோல்டு கோஸ்ட் நகரின் பகுதிகளில் இந்த புயலின் பாதிப்பு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 1,10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சேவை வழங்க பல நாட்கள் ஆகலாம் என்று எனர்ஜி எக்ஸ் என்ற எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிமிடத்திற்கு நிமிடம் வெளிவரும் புயல் பாதிப்புகள் குறித்தான அறிக்கைகள் நிலைமை தீவிரமடைந்து வருவதை யும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் உணர்த்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் மரங்கள் முறிந்து விழுந்ததில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப் பட்டுள்ளது.எனினும் தொடரும் புயல் பாதிப்புகளில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவு கிறது.
மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து பேய் மண்டலம் போல மிக கொடூரமாக அச்சமூட்டும் வகையில் இருந்தது என புயலின் தாக்கம் குறித்து மக்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் வானிலை இயல்பு நிலைக்கு திரும்ப வில்லை என்றும் மீண்டும் கடுமையான இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோல்டு கோஸ்டு நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிர காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல நாடுகள் அதிகமான மழை,தீவிரமான பனிப்பொழிவு ,புயல்,வெள்ளம், வறட்சி உள்ளிட்ட தீவிர இயற்கை பேரி டர்களை எதிர் கொண்டு வருகின்றன.இந்த பேரிடர்கள் விவசாயம் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் தீவிரமான நோய் தொற்றுக்களையும் ஏற்படுத்தும் அபாயம் உருவாகி வருகிறது.குறிப்பாக இந்த பேரிடர்களால் வளர்ந்து வரும் நாடுகளே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.