world

img

ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

நியூயார்க்,டிச.3-  அமெரிக்க ஜனாதிபதியாக  தான்  பதவியேற் பதற்கு முன் காசாவில் உள்ள இஸ்ரேல் பணய கைதிகள்  அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதி ரான நாடுகளை குறிவைத்து மிரட்டி வரு கிறார். இரண்டு நாட்களுக்கு முன் பிரிக்ஸ் நாடு களை மிரட்டினார். சர்வதேச வணிகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றான நாணயத்தை பயன்படுத்தினாலோ அல்லது புதிய நாண யத்தை உருவாக்கினாலோ அந்நாடுகள் மீது 100  சதவீதம் வரி விதிக்கப்படும் என மிரட்டினார்.  இதனைத்தொடர்ந்து பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளை வுகளை சந்திப்பீர்கள் என தனது சொந்த சமூக ஊடகமான ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,  மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பெரு மையுடன் பதவியேற்கும்  2025 ஜனவரி 20க்கு முன் காசாவில் இருக்கும் இஸ்ரேல் பணய கைதி களை விடுவிக்க வேண்டும்.

அவ்வாறு விடு விக்கவில்லை என்றால் மத்திய கிழக்கு பகுதிகளும், மனிதகுலத்துக்கு எதிராக அட்டூழி யங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும். அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு அவர்கள் மீது  மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பணய கைதிகளை விடுவியுங்கள் என ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்காக அமெரிக்கா இதுவரை  22.76 பில்லியன் (100 கோடி) டாலர்களை   செல விட்டுள்ளது (காசா, ஏமனின் ஹவுதி அமைப்பு மீது தாக்குதல் நடத்த) என  பிரவுன் பல் கலைக்கழகத்தின் வாட்சன் இன்ஸ்டிட்யூட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர்  துவங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு 17.9 பில்லி யன் டாலர்கள் வரை ராணுவ உதவியை அமெரிக்கா கொடுத்துள்ளதுகுறிப்பிடத்தககது.