world

img

சாலமன் தீவில் பலத்த நிலநடுக்கம்  - சுனாமி எச்சரிக்கை

சாலமன் தீவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாங்கோ பகுதியிலிருந்து தென்மேற்கே 16 கிமீ தொலைவில், 15 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக இருந்தது. 
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து, 30 நிமிடங்களுக்குப் பின்னர், 6.0 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் சாலமன் நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்த தீவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கடல் நீரோட்டங்களில் அசாதாரண சூழல் இருப்பதால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  
இரண்டு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாவல் அதிர்வுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.