டெகுசிகல்பா, ஆக.31- ஹோண்டுரஸில் புதிய அட்டர்னி ஜெனரலைத் தேர்ந்தெடுப்பதற்குத் தடையாக இருக்கும் வலதுசாரி எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் முயற்சி க்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலைநகர் டெகுசிகல்பாவில் ஆயி ரக்கணக்கான மக்கள், இடதுசாரி ஜனாதிபதி சியோமரா காஸ்ட்ரோ வின் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தலைநகரில் திரண்டிருந்த இடது சாரி ஆதரவாளர்கள் மத்தியில் சியோமரா உரையாற்றிய போது, நாம் ஒன்றுபட்டு, ஒழுங்கமைக் கப்பட்ட எதிர்ப்பை தெரிவிக்க வேண் டும்; இதன் மூலம் மட்டும் தான் ஹோண்டுரஸில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் சர்வாதிகாரி களால் கொள்ளையடிக்கப்படும் நிலையையும் மாற்ற முடியும் என்றார். சியோமரா பதவி ஏற்றத்தில் இருந்து அவர் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக ஏகாதிபத்திய ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த அந்நாட்டின் ‘தேசி யக் கட்சி’ முயற்சித்து வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான ஆஸ்கார் சின்சில்லா வின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தேசிய கட்சி தீவிரப் படுத்தி வருகிறது. புதிய அட்டர்னி ஜெனரலைத் தேர்ந்தெடுக்க லிபர்ட்டி கட்சி பிரதி நிதிகள் எடுத்த முடிவை விதி மீறல் மற்றும் சர்வாதிகாரம் எனக் கூறி, வழக்கம் போல போலி பிரச்சாரங்க ளை தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் தூண்டி விட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு முதல் ஹோண்டுரஸின் அட்டர்னி ஜெனரலாக இருந்த சின்சில்லா, ஜன நாயகத்திற்கு விரோதமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த தேசியக் கட்சியின் முக்கிய கூட்டாளி ஆவார். எனவே புதிய அட்டர்னி ஜெனரலை தேர்ந்தெடுக்கும் தேர்தல், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், ஏகாதிபத்திய ஆதரவு தீவிர வலது சாரிகளின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அட்டர்னி ஜெனரலாக இருந்த சின்சில்லா, சுற்றுச்சூழல் பாதுகாவ லர்களையும் சமூக ஆர்வலர்க ளையும் அதிகாரத்தை பயன்படுத்தி மிக கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகினார். இதே வேளையில் சுரங்கம், நீர் மின்சாரம் மற்றும் வன வளங்களை சுரண்ட கார்ப்பரேட்டு களுக்கு தாராளமாக வழியை ஏற் படுத்தி கொடுத்ததோடு இயற்கை வளங்களை சுரண்டிய அந்த ஊழல் கார்ப்பரேட் பேர்வழிகளை தண்டனையிலிருந்து தப்பிக்கவும் வைத்தவர். புதிய அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரலைத் தேர்ந்தெடுப்பதற்காக ஹோண்டு ரஸ் நாடாளுமன்றம் விவாதங்க ளைத் தொடங்கிய நிலையில்தான், ஏகாதிபத்தியம் கைக்கூலியாகச் செயல்படும் தேசியக் கட்சி, ஆட்சி யைக் கவிழ்க்கும் நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்துகிறது.