வாஷிங்டன், மே 5- கியூபாவுக்கு சென்று வந்ததால் எங்களைத் தொல்லைக்கு உள்ளாக்கினால், நாங்கள் மேலும் உறுதியடையவே செய்வோம் என்று கியூப ஆதரவு மக்கள் இயக்கத்தில் தெரிவித்துள்ளனர். கியூபாவின் மீதான சட்டவிரோதத் தடைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கள் உள்ளன. தடைகளை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அரசுக்கு சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அதற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சி களை நடத்தி வருகிறார்கள். முக்கியமான தருணங்களில் கியூபாவுக்கே சென்று அம்மக்க ளுக்குத் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் செல்வதற் கான அனுமதியைத் தருவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள். அதோடு, அவர்கள் கியூபாவுக்குச் சென்று திரும்பிய பிறகு ஏராளமான தொல்லைகள் தரப்படுகின்றன. அண்மையில் மே தினத்தை யொட்டி இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கியூபா வின் தலைநகர் ஹவானாவுக்கு சென்றிருந்தார் கள். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அப்படி அவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வில் கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் தியாஸ் கானெலும் இருந்தார். அமெரிக்க மக்க ளின் ஆதரவை அப்போது அவர்கள் அவரிடம் தெரி வித்தார்கள்.
கியூபாவுடன் மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்திற்கும் தங்கள் ஆதரவு வழங்கு வதை தனது அமைப்பின் நோக்கமாக இவர்கள் கொண்டிருக்கிறார்கள். மேலும், “வரலாற்று ரீதி யான ஒற்றுமையைப் பல சமூகங்களைச் சேர்ந்த வர்கள் மத்தியில் கட்டுவது, உழைக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதாரமாக இருப்பது, கூட்டான செயல்பாடு மூலமே புதிய உலகம் சாத்தியமாகும். அதற்காக கல்வி மற்றும் கலாச் சாரத்திற்கான இடங்களை அடுத்த தலைமுறை யினருக்கு உருவாக்கித் தருவோம்” என்றும் கூறியிருக்கிறார்கள். கியூபாவில் மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுங்க வரி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல மணி நேரங்கள் அவர்களைக் காக்க வைத்திருக்கின்றனர். இது போன்ற தொல்லைகள் கியூபாவுக்கு சென்று திரும்புபவர்களுக்கு நடப்பது வழக்கம்தான் என்றாலும், இவ்வளவு பேரை ஒரே நேரத்தில் நிறுத்தி தொல்லை தருவது இதுவே முதன்முறை யாகும் என்று மக்கள் இயக்கம் கூறியிருக்கிறது. இது குறித்து மக்கள் இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கியூபாவுக்கு சென்று திரும்பிய குழுவில் பல இளைஞர்களை பல மணிநேரங்களுக்கு சுங்க வரித்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் பயணம் சட்டப்பூர்வமானது. இருப்பினும் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். மியாமி மற்றும் நேவர்க் சர்வதேச விமான நிலையங்களில் மேலும் விசார ணை செய்ய வேண்டும் என்று கூறி தொல்லை கொடுத்திருக்கிறார்கள்” என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
ஆதரவு
இந்தத் தொல்லைகளுக்குக் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துள்ள கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் தியாஸ் கானெல், “நிமிர்ந்து நில்லுங்கள், தோழர்களே. நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்கள் தைரியத்திற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். கியூபாவை ஆதரித்து நிற்பதற்கும், கியூபப் புரட்சியின் சாதனை களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெறுப்பை உமிழ்பவர்களின் மண்ணிலிருந்தே குரல் எழுப்பி யிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு இறுக்கமான அணைப்பை அனுப்பி வைக்கிறோம்” என்று வாழ்த்தியுள்ளார்.