world

img

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!  

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  

அமேசான் நிறுவனம் சில்லறை விற்பனையில் நுழையும் வகையில் ப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.  இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனம், இந்தியப் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) புகார் அளித்தது. இந்த புகாரை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த சிசிஐ, விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளதால், அந்நிறுவனம் 202 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.  

இதன் மேல்முறையீடு வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.  

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் அசோக்குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.  அதில் அமேசான் நிறுவனம் 200 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும் என சிசிஐ பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்து, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.