என்எல்சி நிர்வாகத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் நோட்டீஸ்
கடலூர், பிப்.12- பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, என்எல்சி இந் தியா நிறுவன ஒப்பந்தத் தொழி லாளர்கள் வேலைநிறுத்த அறி விப்பு நோட்டீஸை வழங்கினர். நெய்வேலியில் மத்திய அர சின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுவினர் அனைத்து ஒப்பந்தத் தொழிற் சங்க நிர்வாகிகள், அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களான சிஐ டியு, தொமுச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், இதில் முடிவு ஏதும் எட்டப்படாமல் காலதாமதம் ஏற் படுவதாகவும், இதனால் திங்க ளன்று(பிப்.10) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஒப்பந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேச்சு வர்த்தை நடத்தினர். இதன் முடி வில், 10 நாள்கள் கால அவகா சம் கோரப்பட்டது. அதன்பேரில், ஒப்பந்தத் தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவ தாகக் கூறினர்.
இந்நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத் தரப்பிலி ருந்து ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் பட்டது. அதில், 303 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.130 முதல் ரூ.158 வரை ஊதிய உயர்வு வழங்குவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தின் இந்த குறுஞ் செய்தியால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகம் வாயி லில் அமர்ந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங் கீகரிக்கப்பட்ட தொழிற் சங்க நிர்வாகிகளுடன் என்எல்சி அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு தொழிற் சங்க அலுவலக வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்ப டையில், பிற்பகல் 3 மணிக்கு 7 ஒப்பந்தத் தொழிற்சங்கங் களைச் சேர்ந்த 21 நிர்வாகிகள், என்எல்சி தலைமை அலுவல கத்துக்குச் சென்றனர். அங்கு பணியில் இருந்த துணைப் பொது மேலாளர் (மனித வளம்) சிவராஜிடம் வேலைநிறுத்த அறி விப்பு நோட்டீஸை வழங்கினர். பின்னா் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கக் கூட்டமைப்பினர், “பணி நிரந்த ரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கைகள் மீது 15 நாள்களுக்குள் நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இல்லை யெனில், வருகிற 25-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெறும்” என்றனர்.