what-they-told

img

மூலிகை குடிநீர் ஆய்வு தலைமைச் செயலாளர் தகவல்

தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப்.1- மூலிகை குடிநீர் மூலம் கொரோனாவை தடுக்க  முடியுமா என ஆய்வு செய்து வருவதாக தலைமைச்  செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளி கைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தேவையான மருத்துவ பொருட்கள் இருப்பில் உள்ளது” என்றார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதி களை மீறி வெளியில் நடமாடி னால், மருத்துவமனை களில் தனிமை முகாம்களில் வைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள் ளது என்றும் நாளொன்றுக்கு 2 கோடி மூன்றடுக்கு முக கவ சங்கள் தயாரிக்கப் படுவதாகவும் அவர் தெரி வித்தார். கபசுரக் குடிநீர் கொரோனவை கட்டுப்படுத்துவ தில் பலன் தருமா என செய்தியாளர்கள் கேட்ட போது, ‘’அறிவியல் ரீதியாக தற்போதுவரை கொரோ னாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கப சூரக்குடிநீர் தொடர்பான ஆய்வுகள் நடந்து வரு கின்றன,’’ என்றார்.

ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலொசனை நடத்தி னார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு  குறித்தும், கொள்முதல் செய்ய உள்ள மருத்துவ உப கரணங்கள் குறித்தும் ஆலொசிக்கப் பட்டது.

மேலும், புறநோயாளிக ளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் முககவசம் அணிய  வேண்டும், மருத்துவமனைகளில் போதுமான அள விற்கு கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்தும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.
 

;