what-they-told

img

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்தது எப்படி?

தமிழக பொறியாளர் பேட்டி

சென்னை,டிச.3- நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய விக்ரம் லேண்டரின்  பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங் கள் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம்  லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து  நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. லேண்டர் எங்கு விழுந்தது, லேண்டரின்  தற்போதைய நிலை என்ன என்பதை அறிய இஸ்ரோ தீவிர முயற்சி மேற் கொண்டது.

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம்  லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொண்ட  முயற்சி பலனளிக்க வில்லை. இதனைத்  தொடர்ந்து நாசாவும் கடந்த 2009 ஆம்  ஆண்டு முதல் நிலவை சுற்றி வரும் தனது  ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டரின்  இருப்பிடத்தை அறிய முயன்றது. ஆனால் விக்ரம் லேண்டரின் நிலையை  கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் மற்றும் அதன்  சிதறிய பாகங்களை தங்களது ஆர்பிட் டர் கண்டுபிடித்துள் ளதாக நாசா அறிவித்துள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நாசா, அதில்  புளோரசன்ட் பச்சை நிறத்தில் குறிப்  பிடப்பட்டுள்ள பகுதி, விக்ரம் லேண்ட ரின் சிதைந்த பாகங்கள் என்றும், வெளிர்  நீல நிற பகுதிகள், லேண்டர் விழுந்த தால் நிலவின் மண்ணில் ஏற்பட்ட மாற்றங்  கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மதுரையை சேர்ந்த  பொறியாளரான சண்முக சுப்பிரமணி யன் நாசா எடுத்த புகைப்படங்கள் மூல மாக விக்ரம் லேண்டரின் பாகங்கள் மற்றும் அது விழுந்த இடங்களை தான்  கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார். விக்ரம் லேண்டர் நிலவில் விழுவ தற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்  படங்கள் மற்றும் கடந்த செப்டம்பர் 17,  அக்டோபர் 14, மற்றும் நவம்பர் 1 ஆகிய  தேதிகளில், அதே இடத்தில் அமெரிக்கா  வின் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து விக்ரம்  லேண்டர் விழுந்த இடம் மற்றும் அதன்  சிதறிய பாகங்களை கண்டுபிடித்துள்ள தாக சண்முக சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தனது கண்டுபிடிப் புகளை நாசா விற்கு அனுப்பியதாகவும், அதனை ஆய்வு செய்து தாம் கண்டுபிடித்தது தான் விக்ரம் லேண்டரின் பாகங்கள் என்று அங்கீகரித்து நாசா மின்னஞ்சல் அனுப்பியுள்ளதையும் சண்முக சுப்பிர மணியன் வெளியிட்டுள்ளார்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், சிறு வயது முதலே ராக்கெட்  தொடர்புடைய செய்திகளை ஆர்வத்து டன் அறிந்து வருவதாகவும், நாசாவால்  கூட விக்ரம் லேண்டரை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்கிற ஆர்வத் தில், தான் மேற்கொண்ட ஆய்வின் பலனாக இதை சாதித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மதுரையை பூர்வீகமாகக் கொண்ட  சண்முக சுப்பிரமணியன் சென்னை தர மணியில் உள்ள லினக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, சென்னை பெசன்ட் நகரில்  பேசிய சண்முக சுப்பிரமணியன், “விக்ரம் லேண்டர் காணாமல் போன சம்ப வத்தையடுத்து அதுகுறித்த ஆய்வில் பணி நேரம் போக தினமும் 4 மணி நேரம்  ஈடுபட்டதாகவும், அப்போது நாசா வெளி யிட்ட படங்களை ஆய்வு செய்து லேண்டர் குறித்த விவரங்களை கண்டு பிடித்து நாசாவுக்கும், இஸ்ரோவுக்கும் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

தமது கண்டுபிடிப்பை உறுதி செய்து நாசா மின்னஞ்சல் அனுப்பிய தாக கூறிய அவர், ஆனால் இஸ்ரோ விடம் இருந்து அப்படி எந்த மெயிலும்  வரவில்லை எனவும் குறிப்பிட்டார். நாசா வின் புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதால், சந்திரயான் 2 எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டால் ஆராய்ச்சியாளருக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர்.