32 நாடுகளின் விஞ்ஞானிகள் அச்சம்
புதுதில்லி, ஜூலை 6- கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இருமும் போதும், தும்மும்போது வெளி யேறும் நீர்திவளைகள் மூலமாக ஒரு வருக்கு பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸின் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் காற்றில் பரவி மனி தர்களுக்குப் பாதிப்பை விளை விக்கக்கூடும். காற்றிலும் கொரோ னா வைரஸ் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு தனது முந்தைய பரிந்துரைகளைத் திருத்தி அறி விக்க வேண்டும் என்று உலக அள வில் நூற்றுக்கணக்கான ஆய்வா ளர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தி யுள்ளனர்.
மனிதர்கள் மூலம் மனிதர் களுக்குக் கொரோனா வைரஸ் பர வும். ஒருமனிதர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பர வும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கொரோனா பரவும் என உலக சுகா தார அமைப்பு முன்பு அறிவுறுத்தி யது. அதை மாற்றி, காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என்று அறிவிக்க வேண்டும் என்று நூற்றுக் கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளேடு தெரி வித்துள்ளது.
காற்றின் மூலம் வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரை யை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வா ளர்கள் அடுத்த வாரம் ஒரு விஞ்ஞான இதழில் வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கை யைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரியுள்ளனர். இது குறித்து உலகசுகாதார நிறுவனத்தி டம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், வைரஸ் காற்றில் பறந்ததற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருவர் தும்மியபின், இருமிய பின் அவரின் எச்சிலின் சிறிய நுண் துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றவர் அந்த நுண் கொரோ னா வைரஸை உள்ளே சுவாசித்தால் அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள் ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதா ரங்கள் இருக்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ள தாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் பெனி டெட்டா அலிகிரான்ஸி, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில்,” கொரேனா வைரஸ் நோய் காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என் பதைக் கடந்த இரு மாதங்களாகக் கணித்து வருகிறோம். ஆனால், அதற்கான உறுதியான, நிலையான ஆதாரங்கள் இல்லாததால் அதை வெளியிடவில்லை” எனத் தெரி வித்துள்ளார்.