what-they-told

img

தில்லியில் தொற்று வேகமாக அதிகரிக்கிறது

புதுதில்லி, ஜூன் 12- தில்லியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,877 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,687 ஆக உயர்ந்திருக்கிறது என்று வியாழனன்று வெளியான அரசாங்க சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.  

மேலும், 107 பேர் மரணம் அடைந்திருக் கிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,085ஆக உயர்ந்திருக்கிறது. இறந்தோர் எண்ணிக்கை: அரசாங்கத்தின் கூற்றுப்படி 1,085 ஆனால் மூன்று மாநகராட்சிகளின் கூற்று ப்படி 2,098. இதற்கிடையில் அரசாங்கத்தின் சார்பில் இறந்தோர் எண்ணிக்கை  1,085 என்று கூறப்பட்டிருக்கிற அதே சமயத்தில், தில்லி யில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் அளி த்துள்ள அறிக்கையின்படி இறந்தோர் எண்ணிக்கை 2,098 ஆகும்.