what-they-told

img

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் “ரசம்

நாம் அன்றாடம் சாப்பாட்டிற்கு சேர்க்கப் படும் ரசத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் தன்மை கொண்டது என மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆரா ய்ச்சி மையத்தில் (வி.சி.ஆர்.சி) மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கூறியுள்ளார்.

அவரது பேட்டியை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி யில், சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படு வதில் உணவுப் பழக்கம் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில் உணவில் “ரசம்” சேர்த்து வருகிறோம். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரை யீரலைப் பாதுகாக்கிறது. இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலில் புவியியல் இருப்பிடம் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது, மக்கள்தொகை குறைவான நாகப்பட்டினம், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் குறைவான பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் தொற்று பரவலின் தாக்கம் அதிகமிருக்கும்.

எதிர்காலத்தில் டெங்கு, கொரோனா தொற்று பரவலையும் ஒரே நேரத்தில் சமா ளிக்க வேண்டிய நிலை உள்ளது. டெங்குவை எதிர்த்துப் போராட எந்தத் தடுப்பூசியும் உரு வாக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.