சேலம், டிச. 10- தமிழகத்தில், சங்க காலத்தில் சீனா வுடன் வனிக தொடர்பு இருந்துள்ளதை உறுதி செய்கிற வகையிலான சீன தேசத்தின் வெண்கல கத்தி காசு கண்ட றியப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் பாராமஹால் நாணவியல் சங்கத்தின் இயக்கு நர் சம்சுதீன் சுல்தான் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற சீன தேசத்தின் வெண்கல கத்தி காசு கிமு 4 ஆம் நூற்றாண்டில் புலக்கத்தில் இருந்த 450 கிராம் எடை கொண்ட நாணயம் கிடைக்கப்பெற்றுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் பாரா மஹால் நாணயச்சங்கம், தாய் நாட்டின் பழங்கால வரலாற்றை பாது காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன தேசத்தில் இருந்து யுவான் சுவான் இந்தியா வருவ தற்கு முன்பே இந்தியாவிற்கும் சீன தேசத்திற்கும் சங்க்காலம் முதல் வணிக தொடர்பை உறுதிப்படுத்திய கத்தி காசு கிடைக்கப்பெற்றுள்ளது. வெண்கலத் திலான 450 கிராம் எடை கொண்ட கத்தி காசின் இருபுறமும் நேர் கோடுகளும் குறுக்கு கோடுகளும் இதில் உள்ளது. சீன தேசத்தின் மிகவும் தொன்மை வாய்ந்த மொழியில் (மான்டரிஸ்) எழுத்து கொண்டதாக தெரிகிறது. சீன தேசத்தில் தற்போது உள்ள நாணயம் யுவான். அமெரிக்காவின் ஒரு நடால் 5.22 யுவான் ஆக 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. உலக நாடுகளின் தொன்மையான நாடுகளில் ஒன்றான சீனா 1311இல் குடியரசாக இருந்தது. இவ்வாறன சிறப்பு கொண்ட சீனத்து காசு கிடைத்திருப்பது இந்தியாவின் சங்க கால சீன தேசத்தின் வனிக தொடர்பை உறுதி செய்திருக்கிறது என தெரி வித்துள்ளார்.