திருநெல்வேலி, ஏப் 1- தமிழர்களின் தொன் மையான வாழ்வியல் நாக ரிகம் 3ஆயிரம் ஆண்டு களுக்கு முன்புள்ளது என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில் தமிழ கத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்க கால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி கிரா மத்திலிருந்து கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று படுகையில் வாழ்வியல்மேடு காணப்படுகிறது. இப்பகுதியை விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பணியினை கடந்த 16 -ந்தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
அகழாய்வு பணிக்காக ரூ.15 கோடிநிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இப்பகுதியில் செவ்வண்ணம், கருப்பு-சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி, இட்ட கருப்பு சிவப்பு வண்ண மட்கல், பானைஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கலபானை ஓடுகளும், ஈமத்தாழிகளும் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வண்ணங்களில் அணிகலன்களும் 36 அரிய வகை தொல்லியல் பொருட்கள் வரையிலும் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும் தனித்தனி யாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் தில்லி யில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக இதன் இயக்குநர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.இப்பகுதி இரும்புக்கால புதைவிடப்பகுதியின் வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும்பல அரிய வகை தொல்லி யல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து இப்பணி ஏப்ரல் மாத இறுதிவரை நடைபெறுகிறது.