ஆலங்குளம் அருகே கொடூரம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
திருநெல்வேலி, நவ. 29- ஆலங்குளம் அருகே 14 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என நெல்லை யில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது இதுகுறித்து விபரம் வருமாறு: தென்காசி மாவட்டம் ஆலங் குளம் அருகே உள்ள சோலைசேரி வேதகோவில் தெருவை சேர்ந்த களஞ்சியம் மகன் முத்துவேல் (வயது 30). இவரது நண்பர்கள், அதே ஊரிலுள்ள காமராசர் நகரை சேர்ந்த சிங்கம் மகன் முருகன் (25), கருப்பசாமி (28) மற்றும் பாறைத்தெருவை சேர்ந்த இளைய பெரு மாள் மகன் சிலம்பரசன் (28). இவர்கள் 4 பேரும் செவ்வாய் கிழமை மதியம் 12 மணியள வில் ஊருக்கு அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வயல்வெளியில் 14 வயது சிறுமி ஒருவர் தனி யாக சென்று கொண்டிருந்தாள். அந்த 4 பேரும் ரோடு ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த சிறுமி யிடம் சென்று விசாரித்த னர். அப்போது தனது தாயாரை தேடி செல்வதாக அந்த சிறுமி கூறியுள்ளார். உடனே அந்த 4 பேரும், உனது தாயார் இருக்கும் இடத் துக்கு அழைத்து செல்வதாக கூறி தங்களுடன் வருமாறு கூறினர். இதை நம்பி அவர் களுடன் அந்த சிறுமி ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறினாள்.
அவர்கள் அந்த சிறுமியை ஊருக்கு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். அலறித் தடித்த அந்த சிறுமியை அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கதறி அழுதவாறு ரோடு ஓரத்தில் நின்று கொண்டி ருந்தாள். இதற்கிடையில், மகளை காணாமல் பெற் றோர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். பின்னர் பெற்றோர் அவரை கண்டுபிடித்து தருமாறு ஊத்துமலை போலீசாரி டம் புகார் செய்தனர். போலீசார் ஊருக்கு அருகே ரோடு ஓரத்தில் அலங்கோல மாக அழுதவாறு நின்று கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அந்த சிறுமியை அவர்கள் ஆலங் குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ரோஸ் லின் சாவியோ அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவளை 4 வாலிபர்களும் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத் காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் மக ளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்து வேல், கருப்பசாமி, சிலம்பரன் ஆகிய 3 பேரை புதன்கிழமை மாலையில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். 14 வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச்சென்ற கூட்டு பலாத் காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாலியல் கொடுமை குறித்து தமிழ்நாடு தீணடாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் கூறுகையில், இந்த மோசமான பாலியல் வன்கொடு மையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு கண்டிக்கிறது, மனித தன்மை அற்று மிருகத்தனமாக தலித் சிறுமியிடம் நடந்து கொண்ட 4 பேர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த பெண்ணுக்கான படிப்பு செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்றார்.