what-they-told

img

நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன்?: விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை,டிச.6- அரசு மருத்துவமனைகளில் நோயாளி களுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன்?  என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவப் பணிகள் கழக  நிர்வாக இயக்குநர் விளக்கம் அளிக்க மனித  உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர்  பார்வதி (54). சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற அவருக்கு செவிலியர் ஒருவர், இடுப்பில் ஊசி போட்டார். மருந்து முழுவ தும் உடலில் செலுத்திய பின்னர், ஊசியை  வெளியே எடுக்க முயன்றபோது ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கிக் கொண்டது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்வதி அனுமதிக்கப்பட்டு அவரது உட லில் சிக்கிய ஊசி அகற்றப்பட்டது. இதே போன்று, மேலும் ஒரு சில சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து அரசு  மருத்துவமனை களில் தரமான ஊசி வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக சுகா தாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணை யத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், நோயாளிகளுக்கு போடப்ப டும் ஊசி உடைவது ஏன்? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.