சென்னை, செப்.17- ஒரு கட்சியை சேர்ந்த வேட் பாளர் வேறொரு கட்சியின் சின் னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், மதி முகவின் கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களின் வெற் றியை செல்லாது என அறிவிக்க கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று (செப்.17) விசாரணைக்கு வந்தது. தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றும் இது குறித்து தேர்தல் அதி காரிக்கு புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்சியின் உறுப்பின ராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டி யிட அனுமதித்தது தேர்தல் நடை முறைகளை மோசடி செய்வது ஆகாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுவ தாகத் தெரிவித்த நீதிபதிகள் சின் னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் தேர் தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என்றும் தெரி வித்தனர். அப்போது ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எனினும் தேர்தல் அதி காரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து உச்சநீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்தி ருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் உள்ளதாகத் தெரி வித்த நீதிபதிகள், தேர்தல் ஆணை யம், தி.மு.க., அ.தி.மு.க., அக் கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.