சென்னை, மே 6- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமா கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. ஜெயலலிதா வசித்த இடத்தை கைய கப்படுத்து வதற்கான அறிவிப்பை வெளி யிட்டது தமிழக அரசு.
போயஸ்கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது நோக்கத்தில் வேதா இல்லம் அரசு நினைவிட மாக்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். யாரையும் அப்புறப்படுத்தவோ, மறுகுடியமர்த்தவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை என்றும் அறிக்கை ஒன்றில் வேண்டும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.