what-they-told

img

வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு

வேளாண்துறை தகவல்

சென்னை,மே 27- வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்கையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா.சபை, இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை கூறுகையில், இந்தியாவை பொறுத்தவரையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. வெட்டுக்கிளி நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளது.