what-they-told

img

பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் 5 ஆண்டுகள் தடை

சென்னை,பிப்.13- பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5  ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்ப டும் என பள்ளிக் கல்வித்துறை எச்ச ரித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்  தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு, அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்  கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறி யப்பட்டால் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.