சென்னை, ஆக. 16- காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடை பெற்று வந்த அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வசந்தகுமார், உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என தெரிவித்த அவர், எனவே தரிசனத்தை நீட்டிக்க வேண் டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடி யாது எனக் கூறினர். மேலும் கோவில் நிர் வாகமும், அரசும் தான் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஆக.16) மாலை 4 மணியுடன் தரிசன வாயில் கள் மூடப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர் கள் நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர்.