what-they-told

img

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டாம் : அதிகாரி வேண்டுகோள்

மதுரை, மார்ச் 20- கொரானோ வைரஸ் பரவுவதைத் தடுப்பதன் முயற்சியாக பாஸ்போர்ட் வழங்கும் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மண்டல பாஸ் போர்ட் அதிகாரி த.அருண் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-  கொரானோ பரவலைத் தடுக்க 50 சதவீத அளவிற்கே அவசரத் தேவை யின் நிமித்தமாக பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. மார்ச் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல்3 ஆம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். காய்ச்சல், தலை வலி, இருமல் உள்ளவர்கள் அலுவல கத்திற்கு வர வேண்டாம். பத்து வயதிற் குட்பட்ட சிறுவர்களை அழைத்து வர வேண்டாம். அறுபது வயதிற்கு மேற் பட்டவர்களும் பாஸ்போர்ட்டிற்கு விண் ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும்.மதுரை பாரதி உலா சாலையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலத்தில் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட விசாரணை நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 0452-2521204, 2521205 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது rpo.madurai@mea.gov.in வாயிலாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.