what-they-told

img

வீட்டிற்குள் கார் புகுந்து விபத்து

உதகை, பிப்.9- கூடலூர் - உதகை சாலை யில் சென்று கொண்டிருந்த கார் அப்பகுதியில் இருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்துக் குள்ளனது. கேரள மாநிலம், தலச் சேரி பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினர் காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு செவ்வாயன்று சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, டி.ஆர். பஜார் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் என்பவரது வீட்டிற்கு புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், அவரது மகன் ஷாலினி காயமடைந்து, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், காரை ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்பவரும் காயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.