திருவனந்தபுரம், நவ.10- பெரும்பாவூரிலிருந்து காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப் படும் கேரள அரசின் சூப்பர் பாஸ்ட் பேருந்தில் இடம்பிடித்த பயணி களுக்கு ஆச்சரியமும் அச்சமும் கலந்த ஒரு அனுபவம். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தது ஒரு பெண் என்பதே அதற்கு காரணம். நிலையத்திலிருந்து பேருந்து மெது வாக நகர்ந்து முக்கிய சாலையில் வேகமெடுத்தபோது தான் பலரது அச்சம் விலகியது. பரிச்சயமான வழித்தடம் இல்லை என்றாலும் பேருந்து சரியான நேரத்துக்கு திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். கேஎஸ்ஆர்டிசியின் ஒரே பெண் ஓட்டுநரான வி.பி.ஷீலா. பயணிகளும் சக ஊழி யர்களும் கரம்பிடித்தும் கரவொலி எழுப்பியும் ஷீலாவுக்கு பாராட்டுக் களை தெரிவித்தனர். சுமார் 20 ஆயிரம் தொழிலா ளர்கள் வேலை செய்யும் கேஎஸ் ஆர்டிசியின் ஒரே பெண் ஓட்டுநர் இவர்தான். கடந்த எல்டிஎப் ஆட்சி காலத்தில் இவருக்கு இந்த வேலை கிடைத்தது. முதுநிலை பட்டம் பெற்றவர்கள் உட்பட பத்தாயி ரம்பேர் எழுதிய தேர்வில் முன் னிலை பெற்று வேலையில் சேர்ந்தார். பயிற்சி காலம் முடிந்து கடந்த ஏழு ஆண்டுகளாக கேரள சாலை போக்குவரத்து கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) ஓட்டுநராக ஷீலா வேலை செய்கிறார்.