what-they-told

img

ஏழு பேர் விடுதலை கோரிக்கை : ஆளுநர் நிராகரிப்பு

சென்னை, அக். 18 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  எதிராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்கவில்லை என்று அதிகாரப்பூர்வமற்ற வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு அவர் எழுத்துப்பூர்வ மாக எதையும் இன்னும் வழங்க வில்லை என்றும் தகவல்கள் தெரி விக்கின்றன. இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை ஆளுநர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.