சென்னை, பிப். 22- சந்திரயான்-3 ஓராண்டிற் குள் விண்ணில் அனுப்ப திட்டமிட்டு பணிகள் நடை பெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரி வித்துள்ளார். சனிக்கிழமை (பிப்.22) சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- இஸ்ரோவில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் நடத்தப்படும் இந்த பயிற்சி யில் அனைத்து பள்ளி மாண வர்களும் பங்கேற்க வேண்டும். ‘ககன்யான்’ திட்டப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு 15 மாத பயிற்சிக்காக ரஷ்யா சென் றுள்ளனர். ஓராண்டில் ‘ரோபோ’ உள்ள விண்கலம் முதலில் அனுப்பப்படும். அதன்பின்னர் அடுத்த 6 மாதத்தில் ஆள் இல்லாத விண்கலமும், அதன்பின்னர் மனிதர்களை கொண்ட விண் கலம் அனுப்பப்படும். இதற் கான பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் ‘சந்திர யான்-3’ திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதையும் ஓராண்டிற்குள் விண்ணில் அனுப்ப திட்டமிட்டு பணி கள் நடந்து வருகிறது. இஸ் ரோவிற்கான விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகள் இப்போது தொடங்கவில்லை. ‘ககன் யான்’ திட்டப்பணி முடிந்த பின்னர் அதற்கான பணிகள் தொடங்கப்படும். மீனவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டு தமி ழக அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் குறைகள் இருப்பதாக தெரிவித்தால் அதில் மாற்றம் செய்யப்ப டும். இதுவரை அதுபோல் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறி னார்.