வராக வடிவில் அசுரவதம் புரிய உரசும் போதினில் பூமித்தாய் நெளிய கிருஷ்ணன் சத்ய பாமா ஈன்ற நரகாசுரன் அசுரன் கதை யொன்று அசுரனின் அடாதன அழிக்க கிருஷ்ணன் அம்புப்போர் நடத்திய தருணம் மயங்க அசுரனின் தாயெனும் சத்ய பாமாவோ அசுரவதம் புரிந்து அழித்தனள் பூமித்தாய் தம்முயிர் நீத்த நாளினை இனிப்புடன் தரணியே தீபாவளி நாளெனக் கொண்டாட நரகாசுர வேண்டுகோள் தீபாவளி ஆனதாய் நானிலத்தில் கதையுண்டு அவரவர் கற்பனையாய் சீக்கியர்கள் பொற்கோயில் கட்டுமானத் துவக்கம் அக்கணம் நினைவூட்டும் தீபாவளி முழக்கம் இக்கணமும் சீக்கியர் கொண்டாடும் வழக்கம் எக்கணமும் சீக்கியர் கொண்டாட மட்டும் துன்புறுத்த வேண்டாம் என்றோதிய மகாவீரர் அன்புடமை வழிவாழ வாழ்ந்து மறைந்தார் அந்நாளை தீபாவளி என்றனர் சமணர் இந்நாளை இப்படி கொண்டாடி வருகின்றார் அந்நாள் தீபாவளித் திருநாள் என்று இந்நாள் சுற்றமும் நட்பும் நன்று எந்நாள் இல்லை ஆயினும் ஒன்று இந்நாள் கூடுதல் வேற்றுமை வென்று கூடிக் களித்தலில் காரண காரியம் நாடி ஒதுக்குதல் வேண்டாம் வீரியம் கோடி நன்மை ஒன்றாதல் நேரில் தேடி நீர்வார்க்க ஒற்றுமை வேரில் சாதிமத அசுரர்கள் மெய்யாய் வாசம் நீசமிகு வேற்றுமை விதைக்கும் மோசம் சோதிமிகு தீபஒளித் தீயில் நாசம் நேசமிகு சுற்றமும் நட்பும் வீசும் -பெரணமல்லூர் சேகரன்