what-they-told

img

கண்டர மாணிக்கம் பகுதியில் மின்வெட்டு

சிவகங்கை, ஜூலை17- சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடந்தது. கண்டரமாணிக்கம் துணை மின் நிலையத்திற்கு வயர்மேன், வயர்மேன் உதவியாளர் இல்லை. மின்  பழுது ஏற்பட்டால் அதை பழுதுநீக்க பணியாளர் கள் இல்லை. மின்சார உபயோகத்தை கணக்கெடுக்க ஆள் இல்லாததால்  அடுத்த மாதம் சேர்த்து கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கூடுதல் பணியா ளர்களை நியமித்து மின்வாரிய செயல் பாடுகளை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.