திருப்பூர், டிச.16- பின்னலாடை உற்பத்தி தொழிலுக்கு ஏற்கெனவே இருந்து வரும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 12 சதவிகிதமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கைவிட வேண் டும் என்று உற்பத்தியாளர் சங்கங்கள் ஒன் றிய அரசிடம் நேரில் கோரியுள்ளனர். கடந்த டிச.14 ஆம் தேதியன்று தில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத் தில் தமிழகத்திலிருந்து திருப்பூர் ஏற்றுமதி யாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) பங்கு பெற்றது. இதில், பின்னலாடை உற் பத்திக்கு கடந்த காலத்தைப் போல 5 சத விகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பே தொடர வேண்டும் என்று டீமா சார்பில் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக, இப்போது நிலவிவரும் வர லாறு காணாத அளவில் பஞ்சு, நூல் விலை ஏற்றம், அனைத்து மூலப்பொருள் விலை உயர்வு, கண்டெய்னர் பற்றாக்குறை, கடு மையான விலை ஏற்றம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்தித்து வருகிறது. பின்னலாடை சிறு, குறு தொழில் நசுக்கப்பட்டு உள்ளது. இந்த வேலையில் ஜிஎஸ்டி அதிகப்படுத்தி னால் இன்னும் பின்னலாடைத் தொழில் பாதிப்பு ஏற்படும். லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகையால், ஜிஎஸ்டி உயர்த்துவதை ஒன் றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர வேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்ட மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.