what-they-told

img

பிளாஸ்டிக்குகளுக்காக ஓர் உச்சிமாநாடு

நைரோபி, கென்யா. இந்த வாரம்  கூடும் உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் பிளாஸ்டிக் மாசைக் குறைக்க  உதவும் உடன்படிக்கை குறித்து விவாதிக்கின்றனர். ஆர்க்டிக் முதல் எவரெஸ்ட் வரை பிளாஸ்டிக்குகள் இன்று பூமி முழுவதும் பரவியுள்ளன. இக்கட்டான இன்றைய சூழ்நிலையில் இது பற்றிப் பேசப்படும் முதல் உலக மாநாடு இது. பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா இடங்களி லும் மலை போல குவிந்துள்ளன. இது உலக மக்களிடையில்  பொறுமையின்மையை ஏற்படுத்துகிறது என்று ஐ நா சூழல் பேரவையின் (U N Environment Assembly ESA) இயக்குனர் இன்ஜர் ஆண்டர்சென் (Inger Andersen) கூறுகிறார். பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த ஒரு உடன்படிக்கை 2015 பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஏற்படும் முக்கிய பன்னாட்டு உடன்படிக்கையாக அமையும் என்று நம்பப்படுகிறது. உலக மக்களின் பிளாஸ்டிக்கிற்கு எதிரான உணர்வுகளால் பேரவையின் 193 உறுப்பு நாடுகளும் இதற்கான உருஒப்பந்தத்தில் (blue print) கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன் எப்போதையும் விட இப்போது பிளாஸ்டிக்குகள் பற்றிய சூழல் மாசுப்பிரச்சனை உலகின் கவனத்தைப் பெற்றுள்ளது.

நீர் முதல் நிலம் வரை

இப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பன்னாட்டு அளவில் சட்டப்பூர்வ மான விதிமுறைகளுடன் கூடிய உடன்படிக்கை தேவை என்பது இன்று உணரப்படுகிறது என்று ஆண்டர்சென் கூறுகிறார். உலகில் எந்த ஆயுதத்தைக் காட்டி லும் மக்கள் சக்தி வலிமை வாய்ந்தது என்று  அவர் சர்வதேசப் புகழ்பெற்ற கார்டியன் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். போது மான அளவிற்கு மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்துவிட்டன.  அதனால் தொடரும் இவற்றின் மித மிஞ்சிய பயன்பாடு அவர்களுக்கு இவற்றின் மீது வெறுப்பை ஏர்படுத்தியுள்ளது. நாம் அனைவருமே இன்னமும் பல வற்றிற்கு பிளாஸ்டிக்குகளையே நம்பி யிருக்கிறோம் என்றாலும் இவற்றின் கட்டுப்பாடு தொடர்பான ஏதேனும் ஒரு  உடன்படிக்கை அவசியம் என்று உலக  மக்களில் நான்கில் மூன்றுபேர் கருதுகின்ற னர். உலகில் வேறெந்த நாட்டையும் விட  தனிநபர் பிளாஸ்டிக் பயன்பாட்டில் முத லிடத்தில் இருக்கும் அமெரிக்கா சமீபத்தில் பிரான்சுடன் இணைந்து, உருவாகும் இடத்திலேயே பிளாஸ்டிக் கழிவை அகற்ற உடன்படிக்கை தேவை என்று கூறியுள்ளது.

சூழல் பேரவையின் முக்கியக்குறிக்கோள்

2022 பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நைரோபியில் நடைபெறும் ஐநா சூழல் பேரவையின் ஐந்தாவது மாநாட்டில் பிளாஸ்டிக் மாசுகளை முற்றிலும் அகற்ற விரி வான ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்கு வது முக்கிய இலட்சியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காக பன்னாட்டுப்  பேச்சுவார்த்தைக் குழு (Intergovernmental Nigociating Commitee INC) அமைக்கப்பட வுள்ளது. இது சர்வதேச அளவில் உரு வாகும் விரிவான உடன்படிக்கையின் விதி முறைகளை இறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. உறுப்பு நாடுகள் பிளாஸ்டிக் மாசுக் குறைப்பு ஒப்பந்தத்திற்கு சம்மதித்தால் உலக  நாடுகள் கையெழுத்திடுவதற்கான உடன் படிக்கையை இந்தக் குழு தயாரிக்கும். இன்று உலகில் வெறும் 9 சதவீத பிளாஸ்டிக்குகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். மக்க பல காலம் பிடிக்கும்.  இவை நீண்டகால மாசுபடுத்தி. இதை எரித்தால் ஆபத்து. புதைத்தால் அதைவிட பேராபத்து. இவை சிதைந்து உண்டாகும் நுண் பிளாஸ்டிக்குகள் உணவுச்சங்கிலியில் இணைந்து அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. வரலாற்றில் முதல்முறையாக பிளாஸ்டிக் மாசு என்னும் கொள்ளைநோய் (plague of plastics) பிரச்சனையை கட்டுப் படுத்த உருப்படியாக ஏதேனும் செய்யப் படவேண்டும் என்ற கருத்து இப்போது உலக மக்களிடையில் வலுப்பெற்றுள்ளது. அத னால் இன்று உலகம் நைரோபி மாநாட்டின் முடிவுகளை பதட்டம் நிறைந்த நம்பிக்கை யுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்று ஆண்டர்சென் கூறுகிறார்.

ஒன்பதில் ஏழும் குப்பைத்தொட்டியில் 

1950 முதல் இன்றுவரை 9 பில்லியன் (பில்லியன் - 100 கோடி) டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 7 பில்லியன் டன் கழிவுகளே. இவை  மறைவதில்லை. மக்குவதுமில்லை. இவற்றை நாம் மறுசுழற்சி செய்யப்படும் குப்பைத்தொட்டியில் போடும்போது அதனுடன் நம் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால் இது தவறு. அதற்குப் பிறகே சிக்கல் தொடங்குகிறது. கழிவாகும் அத்தனைப் பிளாஸ்டி க்குகளும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. 76 சதவீதக் கழிவுகளும் குப்பைகளாகவே தன் நிலையைத் தொடர்கின்றன. மீதியில் சிறு பகுதி மட்டுமே எரியூட்டப்படுகின்றன. விவேகமற்றமுறையில் எரிக்கப்படும் இவை நச்சு ரசாயனங்கள், கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றை  உமிழ்கின்றன.

உலக வன நிதியத்தின் எச்சரிக்கை

இம்மாநாட்டில் ஐநா உறுப்புநாடுகள் இப்பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் உடன் படிக்கைக்கு சம்மதிக்கவில்லை என்றால் 2050ஆம் ஆண்டிற்குள் கடல்களில் பிளாஸ்டிக் மாசுகளின் அளவு நான்கு மடங்காக அதிகரிக்கும். இதனால் பேரழிவு கள் ஏற்படும் என்று உலக வன நிதியம்  (WWF) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை யில் எச்சரித்துள்ளது. எண்ணெய் மற்றும் வாயுவில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தால் அது மாசைக் குறைப்பதுடன் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த உதவும். பிளாஸ்டிக்குகள் குறித்த உலகின்  முதல் உடன்படிக்கை உலக சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள்ஆற்றும் பெரும் சேவையாக அமையும்.

இரண்டு முக்கியத் தீர்மானங்கள்

மாறிவரும் பன்னாட்டுச் சூழலில் புதிய உடன்படிக்கை ஏற்படவேண்டும் என்ற கருத்திற்கு இதற்கு முன் இது போன்ற  முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பிளாஸ்டிக்குகளைக் கட்டுப்படுத்த இதுவே  தருணம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்து கின்றனர். இம்மாநாட்டில் இரண்டு முக்கியத் தீர்மானங்களுக்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதில் ருவாண்டா, பெரு ஆகிய நாடுகள் 70 உலக நாடுகள் மற்றும் 27 ஐரோப்பிய ஒன்றிய நாடு களின் ஆதரவுடன் பிளாஸ்டிக்குகளின் முழு வாழ்க்கை ச்சுழற்சி பற்றிய ஒரு தீர்மா னத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இப்பொருட்களின் கழிவுமேலாண்மை குறித்து கம்போடியா, மைக்ரோனேசியா தீவு நாடான பாலவ் (Palau) மற்றும்  ஸ்ரீலங்காவின் ஆதரவுடன் பிளாஸ்டிக்கு களின் கழிவுமேலாண்மை பற்றி ஜப்பான் மற்றொரு தீர்மானத்தைக் கொண்டுவரு கிறது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி அமைப்புகளும் ஐநாவின் அனைத்து உறுப்புநாடுகளும் உறுதியான இத்தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகளவில் அதிகக் கழிவுகள் உருவாகக் காரணமாக இருக்கும் பிரபல பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட 90 வணிக  நிறுவனங்களின் தலைவர்கள் சட்டரீதி யிலான விதிமுறைகளுடன் கூடிய உடன் படிக்கை ஏற்படவேண்டும் என்று கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெப்சி, கோக்கோ கோலா, ப்ராக்டர் அண்ட் கேம்பிள் (Procter&Gamble) மற்றும் யூனிலிவர் (Unilever) ஆகிய நிறு வனங்களும் அடங்கும். உலகம் ஆவலுடன் காத்திருக்கும் இந்த பிளாஸ்டிக்குகளுக்கானமுதல் உலக  உச்சிமாநாட்டில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கையில் இவற்றின் உற்பத்தி, கண்காணிப்பு மற்றும் ஏழை நாடுகளுக்கு மறுசுழற்சிக்கான நிதி யுதவி ஆகிய அம்சங்கள் இடம்பெறும் என்று  ஆண்டர்சென் கூறுகிறார். நைரோபி மாநாட்டில் நல்ல முடிவுகள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்