what-they-told

img

ஜம்மு - காஷ்மீரில் 4 முறை நில அதிர்வு

காஷ்மீர்,டிச.31- ஜம்மு-காஷ்மீர் பகுதியில் திங்களன்று இரவு  4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 10.42 மணிக்கு 4.7  ரிக்டர் அளவுக்கோலில் முத லாவது நில அதிர்வும், அத னை தொடர்ந்து ஆறு நிமிடங் கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் இரண்டா வது நில அதிர்வும், மூன்றா வது மற்றும் நான்காவது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீர் பகுதியிலும் திங்களன்று மாலை 5 மணி யளவில் நில அதிர்வு ஏற்பட் டது. ஹுன்சா, கில்ஜித், ஸ்கார்டூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு ஏற்பட்ட போது வீடு களை விட்டு வெளியேறிய தாகவும், இஸ்லாமாபாத், ராவல்பண்டி போன்ற இடங் களிலும் நில அதிர்வு உணரப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

;