weather

ஐந்து மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக் கல், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஆக. 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.அதே போல் திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.10 ஆம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

;